சென்னை: திருவைகுண்டம் அருகே தவெக நிர்வாகிகளால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதலமைச்சர் விஜய் எப்போது செயல்படுவார் என கனிமொழி எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;
திருவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதலமைச்சர் விஜய் செயல்பட போவது எப்போது?. இவ்வாறு கூறியுள்ளார்.
