சிங்கப்பூர்: 2026ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் தகுதிச்சுற்று டி20 கிரிக்கெட் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இதில் நேபாள அணியும், சீனா அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நேபாள வீரர்கள், சீனப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அவர்கள் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களைக் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஆசிப் ஷேக் 4வது ஓவரில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குஷால் புர்டெல் அற்புதமாக விளையாடி 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 16 சிக்சர்களுடன் 129 ரன்கள் விளாசினார். இவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி அட்டகாசப்படுத்தினார். குஷால் மல்லா 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் சேர்த்தார்.
ரோஹித் பௌடல் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் அவுட்டாகாமல் 69 ரன்கள் எடுத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் இருமுறை 300 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் அணி என்ற உலக சாதனையை நேபாளம் தனதாக்கிக்கொண்டது. இந்த போட்டியில் நேபாள அணி, சீனா அணியை 221 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
