- விஜய்
- மோடி
- சட்டசபை
- Amitsha
- நிர்மலா சீதாராமன்
- சென்னை
- முதல் அமைச்சர்
- நரேந்திர மோடி
- தில்லி
- தமிழ் சட்டமன்றத் தேர்தல்கள்
- ஐரோப்பிய ஒன்றிய
- தமிலாகா
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதன்முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். இதனை தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் தவெக வென்றது. ஆனாலும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு கூடுதல் எம்எல்ஏக்கள் தேவைப்பட்டனர். இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து வெற்றிபெற்ற காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தவெக ஆட்சி அமைத்தது. முதல்வர் விஜய் உட்பட 35 பேர் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், முதல்வரான பிறகு தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை அதிமுகவில் இருந்து 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், சில எம்எல்ஏக்களை தவெகவுக்கு இழுக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதல்வர் விஜய் டெல்லி சென்றார். அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். நண்பகல் 12 மணியளவில் விஜய் டெல்லி சென்றடைந்தார். அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்துக்கும் அவர் முதல் முறையாக சென்றார். அவருக்கு அங்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. இதை விஜய் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் புறபட்டு 4.30 மணிக்கு பிரதமர் மோடியின் புதிய அலுவலகமான சேவா தீர்த் அலுவலகம் சென்றார்.
இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் ‘பி.எம்.ஸ்ரீ’ திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று மாலையே உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
