ரெட்டியார்சத்திரம், மே 25: கன்னிவாடி அடுத்த ரெட்டியார்பட்டி கிராம மயானம் அருகேயுள்ள தோட்டத்தில் முகத்தில் ரத்த காயங்களுடன் இரு தினங்களுக்கு முன் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் கன்னிவாடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், சடலமாக கிடந்தவர் கன்னிவாடியை சேர்ந்த டிரைவர் பாலசுப்பிரமணியம் (45) என்பதும், மர்ம நபர்கள் அவரை சர்வே கல்லால் அடித்துக் கொன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
