இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தேவதானப்பட்டி, மே 6: தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் அக்ரஹாரதெருவைச் சேர்ந்தவர் ராகுல்(23). இவருக்கு சரண்யா(23) என்ற மனைவியும் ஒரு வயது குழந்தையும் உள்ளனர். இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரண்யா ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: