உதகை கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில, வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்கள் பயணிக்க இன்று முதல் தடை!!

நீலகிரி: உதகை கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில, வெளி மாவட்ட சுற்றுலா வாகனங்கள் பயணிக்க இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரள மாநில வாகனங்களை கூடலூர் வழியாக காவல்துறை, வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். TN43 மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதர பதிவு எண் கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகள் உாிய நுழைவு சீட்டு பெற்று பயணிக்கலாம் என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார்.

 

Related Stories: