×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது.

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் மதியம் உச்சிகால பூஜையை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தர்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Chitra Vashanta Festival ,Subramaniya Swami Temple ,Thiruchendur ,Swami Jayanthanathar Valli ,Swami Jayanthanathar ,
× RELATED குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி தவெக...