திருப்பூர், ஏப். 21: திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் வேலுமணி, சபீனா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு, மேற்கு வங்கங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஓட்டுரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு கட்டாயம் வழங்க வேண்டும்.
