காஷ்மீர் உதம்பூரில் ராம்நகர் என்ற இடத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காகோர்ட் என்ற கிராமத்தில் வளைவில் திரும்பும்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
