×

அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதியில் வாக்கு பதிவு மையங்களில் தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு

அரியலூர், ஏப். 13: அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல், அரியலூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்றத் தொகுதி, வாலாஜாநகரம் ஊராட்சி, வெங்கடகிருஷ்ணாபுரம் மற்றும் அஸ்தினாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள் 71, 72, 73, 74, 78, 79, 80 ஆகிய வாக்குச்சாவடி மையங்களை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் பார்வையிட்டு வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு வசதிகள்,

போதிய இடவசதிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளின் கண்காணிப்பு பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அலுவலர்களுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வில் தேர்தல் பணிபுரியும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

 

 

Tags : Election Police Observer ,Ariyalur, Jayankondam ,Ariyalur ,Police Observer ,Jayankondam ,Om Prakash Tripathi ,Ariyalur district ,Tamil Nadu Assembly General Election ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...