×

பொன்னமராவதி அருகே பிடாரம்பட்டியில் விநாயகர் கோயிலில் அன்னதானம்

பொன்னமராவதி,ஏப்.12: பொன்னமராவதி அருகே ஆலவயல் பிடாரம்பட்டியில் வழிவிடும் வயல்வெளி விநாயகர் கோயிலில் 82ம் ஆண்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஆலவயல் பிடாரம்பட்டி வழிவிடும் வயல்வெளி விநாயகர், வயல்வெளி லிங்கேஸ்வரர், பாதாள முருகன் பாலதண்டாயுதபாணி சுவாமி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு 81ம் ஆண்டு சிறப்பு வழிபாடு நேற்று 11ம் தேதி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆலவயல் மிராஸ் அழகப்பன் அம்பலம், காடன் அம்பலம், காடன்பூசாரி மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராமலிங்கம் சாமியாடி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

 

Tags : Vinayagar temple ,Pidarambatti ,Ponnamaravathi ,Vayalveli Vinayagar temple ,Vayalveli Vinayagar ,temple ,Vayalveli Lingeswarar ,Patala ,Murugan ,Balathandayudapani ,Swami Panguni ,
× RELATED அறந்தாங்கியில் 100% வாக்குப்பதிவை...