மார்த்தாண்டம், ஏப்.12: மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் (56). விவசாயி. சம்பவத்தன்று சகாயராஜூம் அவரது நண்பரான நிர்மல்குமார்(45) என்பவரும் இரவிபுதூர்- மார்த்தாண்டம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். கல்லுத்தொட்டி பெட்ரோல் பல்க் அருகே வரும்போது சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது இவர்கள் மேல் அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த பைக் வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சகாயராஜ் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது யார்? என விசாரித்து வருகின்றனர்.
