டெல்லி: மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. காவிரியில் நீர் திறக்க ஏற்கனவே மனுத்தாக்கல் செய்த நிலையில் தற்போது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
