தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் முதல் கட்ட வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் பட்டியலிடும் பணி இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இருக்கிறது. ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் இப்பணியில் 1.15 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 19,000 மேற்பார்வையாளர்கள் வீடு வீடாகச் சென்று முழுமையாக டிஜிட்டல் முறையில் மக்களிடம் தரவுகளைச் சேகரிக்க உள்ளனர்.

வீட்டு வசதிகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்த 33 கேள்விகள் கொண்ட அட்டவணை இந்த பணியில் பயன்படுத்தப்படுகிறது. அதே போல ஆன்லைனில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்களின் தனித்துவ அடையாள எண்ணை (Self-enumeration ID) கணக்கெடுப்பாளரிடம் வழங்கலாம். இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ளனர். அதே போல வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: