வந்தே மாதரம் பாடல் மசோதாவை திமுக எதிர்க்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் கட்டாய மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நாட்டை ஏன் பிளவுபடுத்துகிறீர்கள்?, அரசை எதிர்த்தால் நாட்டுக்கு எதிரானவர்கள் என்கிறீர்கள். ஒன்றிய பாஜக அரசு முகமூடி போட்டு மசோதாவை கொண்டு வந்துள்ளது. சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் தேச உணர்வை மக்கள் மீது திணிக்க முடியாது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
