பெங்களூரு: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன் மேல்முறையீடு செய்து, காவிரி நீரை விடுவிப்பதற்கான உத்தரவின் பேரில் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவை எதிர்க்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் டி. கே.சிவக்குமார் கூறினார். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் 15 நாட்கள் தினமும் 3,500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வது தொடர்பாக டெல்லியில் உள்ள கர்நாடகா பவனில் மூத்த வழக்கறிஞர் மோகன் கதாரகி, மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் சசிகிரண் ஷெட்டி உள்பட வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், ‘இரண்டு முறை காவிரி தண்ணீரை திறக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஆணையம் நிராகரித்தது. இந்த முறை கர்நாடகாவுக்கு தண்ணீர் விடுமாறு உத்தரவிட்டுள்ளது.
மாநில நீர் பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சட்டபூர்வமான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். மேலும், பெங்களூரு திரும்பிய பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம் தமிழ்நாடு முதல்வர் விஜய் என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவருக்கு உரிய மரியாதையை அளித்து அழைத்தேன்.
கூட்டத்திற்கு, நமது மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களை உரிய மரியாதையுடன் உபசரிப்பது நமது கடமை, மேலும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக மாநில காவிரி படுகையில் உள்ள வறட்சி நிலைமையை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்யுமாறு முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் அவரது வருகைக்கு தேவையான ஹெலிகாப்டர் ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் அவருக்கு தெரிவித்துள்ளேன். அவர் கள உண்மைகளை நேரில் பார்க்க வேண்டும் என்றார்.
