3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளரான அசுதேஷ், தங்களின் முக்கிய 3 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போரட்டம் தொடரும் என தகவல் தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும், நீட் வினாத்தாள் கசிவு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட நீட் தேர்வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும், மேலும் உண்ணாவிவரதப் போராட்டத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் கல்வி ஆர்வலரான சோனம் வாங்சுக் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தவிர கல்விமுறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதேஷ் வலியுறுத்தி உள்ளார். தங்களின் இந்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை டெல்லி போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: