சென்னை: நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தை விலைபேசி சமாதானம் செய்ய முயன்று அமைச்சர்கள் தோற்றுள்ளனர். அப்பாவிகள் வாயை அடைத்துவிடலாம் என்ற எண்ணம் 60 நாட்களுக்குள் முதல்வருக்கு வந்துள்ளது வேதனையளிக்கிறது.
