கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். புதுபாலப்பட்டு அரசு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறுவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். சிறுவன் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிவதற்காக உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது போலீஸ்.
