×

வாகனம் மோதி அரிசி வியாபாரி பலி

நீடாமங்கலம், ஜூலை. 15: நீடாமங்கலம் அருகே டாடா ஏசி மோதி அரிசி வியாபாரி பலியானார். திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் நாகூர் மீரான் பிச்சை (55). அரிசி வியாபாரி. இவர், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து திருவாரூர் சென்றுவிட்டுஇருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அப்பொழுது நீடாமங்கலத்தில் இருந்து வேகமாக எதிரே சென்ற டாடா ஏசி ஒளிமதி ஓடதுரை என்ற இடத்தில் மோதியதால் சம்பவ இடத்திலேயே நாகூர் மீரான்பிச்சை பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த செல்வகணேசன் (30) என்கிற டாட்டா ஏசி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Tags : Needamangalam ,Tata AC ,Nagore Meeran Pichai ,Palakkarai, Trichy ,Trichy ,Thiruvarur ,
× RELATED சிறுமிக்கு தாலி கட்டியவர் மீது போக்சோ வழக்கு