சென்னை: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் சென்னை கொண்டு வரப்பட்டன. வேலூரைச் சேர்ந்த வினய்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவிசங்கர் உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரின் உடல்கள் வியட்நாமில் இருந்து நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன.
