×

வேலூர் தொரப்பாடியில் காய்கறி வாங்க 17 வயது சிறுவன் பைக் ஓட்டி சென்றதாக தந்தை மீது வழக்கு

 

வேலூர், ஜூலை 10: வேலூர் தொரப்பாடியில் காய்கறி வாங்க 17 வயது சிறுவன் பைக் ஓட்டி சென்றதாக தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தனராஜ்(46). இவரது மகன் 17 வயது சிறுவன். இவர் தனது வீட்டிற்கு தேவையான காய்கறி வாங்க வேலூர் டோல்கேட்டில் உள்ள உழவர் சந்தைக்கு நேற்றுமுன்தினம் காலை சென்றார். காய்கறி வாங்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த ஏஎஸ்பி தனுஷ்குமார், சிறுவன் பைக் ஓட்டி வந்ததை பார்த்து உடனே நிறுத்த கூறினார்.

 

Tags : Vellore's Thorappadi ,Vellore ,Dhanaraj ,Thorappadi ,
× RELATED நியாய விலை கடையில் தரமில்லாத அரிசி...