சென்னை: தவெக நிகழ்ச்சியில் எச்சில் இலைகளை எடுக்க தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்தியதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகத்தை சுத்தமாக வைத்திருக்க பாடுபடும் தூய்மை பணியாளர்கள் கண்ணியத்தை காலில் போட்டு மிதிக்கும் செயல். தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தியவர்கள் மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையும், உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
