சின்னமனூர், ஜூலை 2: சின்னமனூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 3ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, சின்னமனூர் சுற்றியுள்ள கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்தலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார் விநியோகம் இருக்காது என சின்னமனூர் செயற்பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
