சென்னை: புதிய ஊரக வேலை திட்டத்தின் செயலாக்கம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். “மகாத்மா காந்தி பெயரிலேயே ஊரக வேலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். புதிய ஊரக வேலை திட்டத்தால் மாநில அரசுக்கு ரூ.5,000 கோடிக்கும் மேல் கூடுதல் சுமை ஏற்படும். புதிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் மாநில வீட்டு வசதித் திட்டங்களையும் சேர்க்க வேண்டும்” என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
