குறுவை சாகுபடி விவசாயிகள் வேறு வேலைக்கு தயாராக வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் அட்வைஸ்

திருவாரூர்: உணவுத்துறை அமைச்சர் வெங்கட ரமணன் திருவாரூரில் அளித்த பேட்டி:
திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத சூழல் நிலவுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டூரில் தண்ணீர் வராத நிலையில் குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகள் எப்போதும் வேறு வேலைக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். இது இல்லையென்றால் அடுத்ததற்கு முயற்சி செய்ய வேண்டும். குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் வேறு வேலைக்கு செல்வார்கள்.

நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்பட்டால் தான் பொதுமக்களுக்கு நல்ல அரிசியை வழங்க முடியும். அதிக சதவீதம் வைத்து நெல் கொள்முதல் செய்தால் பழுப்பு அரிசி, கருப்பாக இருக்க கூடிய அரிசியை தான் மக்களுக்கு வழங்க முடியும். மும்முனை மின்சாரம் தடைபடுவதால் வயல்வெளிகள் பாலம் பாலமாக வெடித்து காணப்படும் சூழல் நிலவுவதற்கு சில நாட்களில் சரியான தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: