×

பெண்ணை தாக்கியவர் கைது

 

திருச்சி,ஜூன் 25: திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (76), இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆனந்த் (41). இவர் மதுபோதையில் அடிக்கடி பக்கத்து வீட்டாருடன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 23ம் தேதி மூதாட்டி ஆனந்தை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆனந்த் மூதாட்டியை திட்டி தாக்கி, அவரது சகோதரியை கீழே தள்ளினார். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குபதிந்து ஆனந்தை கைது செய்தனர்.

Tags : Trichy ,Dhanalakshmi ,Thennur ,Anand ,Anand… ,
× RELATED குட்கா விற்றவர் கைது