கட்டிமேடு அரசு பள்ளியில் ஸ்டெம் பயிற்சி முகாம்
சென்னை பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ACADEMY OF STEM EXCELLENCE என்ற பயிற்சியினை தொடங்கி வைத்தார் மாநகராட்சி மேயர்
ஸ்டெம் பார்க் பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும்
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.
குறுவை சாகுபடிக்கான நெல் பயிரில் முட்டை ஒட்டுண்ணியை வைத்து தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்-வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்
STEM வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை வாபஸ் பெற்றது: பள்ளிக்கல்வித்துறை
ஆலங்குடி கிராமத்தில் குறுவை நெற்பயிர்களை தாக்கும் தண்டு துளைப்பான் பூச்சி: நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு
நெல் வயலில் தண்டு துளைப்பான் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
கடையம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
ஓசூரில் தண்டு பகுதியில் குலை தள்ளிய அதிசய வாழை
கொரோனா’ நோயாளிகளை குணப்படுத்த ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை முறை : அபுதாபியில் 73 பேர் விரைவாக குணமடைந்தனர்
முன்னேற்பாடுகள் மும்முரம் வாழை தண்டின் சாறை குடித்தால் சிறுநீரக கல் உண்டாவதை தடுக்கலாம்
எலும்பு மூட்டு பிரச்னைக்கு நிவாசா மருத்துவமனையில் நவீன “ஸ்டெம் செல்” சிகிச்சை அறிமுகம்
ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் நடிகைக்கு டாக்டர் பட்டம்
தூத்துக்குடி மையவாடியை ஸ்டெம் பார்க்காக மாற்றக்கூடாது கீதாஜீவன் எம்எல்ஏ வலியுறுத்தல்
அமெரிக்காவில் 2017-ல் ஸ்டெம் கல்வி பயின்றவர்கள் 56% இந்திய மாணவர்கள் என தகவல்
நெற்பயிரை குருத்துப்பூச்சி தாக்குதலில் இருந்து மீட்பது எப்படி?
உலகிலேயே முதல்முறையாக ஸ்டெம்செல் மூலம் சேதமடைந்த திசுக்களை சரிசெய்ய முடியும் என நிரூபித்து சீன விஞ்ஞானிகள் அசத்தல்
கடையம் அருகே பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு எரிப்பு
கடையம் அருகே கரடிகள் நடமாட்டம்