சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்துள்ளவர்களில் தகுதியானவர்களுக்கு நவ.25-ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 11.85 லட்சம் பேர் முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு: தகுதியானவர்களுக்கு நவ.25-ம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் ; தமிநாடு அரசு தகவல் appeared first on Dinakaran.
