×

சீர்காழி அருகே திடீர் மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தது

*மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

சீர்காழி : சீர்காழி அருகே திடீர் மழையால் 3 மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்சாரம் துண்டிப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சியில் 11ந்தேதி மதியம் பலத்த காற்று மின்னலுடன் பெய்த திடீர் மழையால் 3 மின்கம்பங்கள் வயலில் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனைதாபேகம்கமாலுதீன், உடனே மின்சார வாரிய அலுவலகத்தில் மின்கம்பம் சாய்ந்தது தொடர்பாக புகார் தெரிவித்தார். இதன் பேரில் அங்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் 11ம் தேதி மாலை முதல் 12ம் தேதி விடியற்காலை வரை விடிய விடிய போராடி வயலில் சாய்ந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை புதைத்து மின் இணைப்பு வழங்கினார். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கும், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி, பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

The post சீர்காழி அருகே திடீர் மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Dinakaran ,
× RELATED திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில்...