×

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்தது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் 10 நாள் ஆனது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெயில், மழை ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் பெரும் சிரமங்களுக்கு இடையே இந்தப் பகுதிகளில் தினமும் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்தது. அண்மையில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறவிருந்த நேரு டிராபி படகுப் போட்டியை கேரள அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில் மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்யப்படுகிறது.

மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post வயநாடு நிலச்சரிவு எதிரொலி: மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு appeared first on Dinakaran.

Tags : Wayanadu landslide ,Kerala government ,Onam ,Wayanadu ,Kerala State ,District Suralmala ,Mundakka ,Punjrimatam ,Atamale ,
× RELATED ஓணம், புரட்டாசி மாத பூஜை; சபரிமலை...