×

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளை பார்வையிட சென்றபோது சோகம்.. கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

கேரளா: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு செல்லும் வழியில் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் கார் விபத்தில் சிக்கியது. கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு, சூரல்மலா, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 150ஐ கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 500 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில், மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது காரில் சென்று கொண்டிருந்தார். மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியில் சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு தலை மற்றும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளை பார்வையிட சென்றபோது சோகம்.. கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Kerala Minister ,Veena George ,Wayanad ,Kerala ,Wayanad region ,Suralmala ,Mundakkai ,Kerala Minister Veena George ,Dinakaran ,
× RELATED கேரளாவில் 23 வயது மாணவர் அண்மையில்...