×

வேலூரில் 105.3 டிகிரி பதிவு; வெயிலில் சுருண்டு விழுந்து முதியவர் பரிதாப பலி

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டத்தில் நேற்று 105.3 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், பேரணாம்பட்டு அருகே முதியவர் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார். வேலூர் மாவட்டத்தில் நேற்று 105.3 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(70) என்பவர், நேற்று மதியம் 12.30 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார்.

வெகு நேரமாகியும் கண்ணன் வீடு திரும்பாததால் அவரது மாைனவி ஜோதி வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடந்ததையும், வெயிலால் கால்களில் கொப்பளங்கள் எழும்பி இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதியினர் வந்து தண்ணீர் தெளித்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வெயில் தாங்காமல் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

The post வேலூரில் 105.3 டிகிரி பதிவு; வெயிலில் சுருண்டு விழுந்து முதியவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Peranambattu ,Pharatabha ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...