×

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் இன்று ஆய்வு செய்கிறார்

சென்னை: தூத்துக்குடியில் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு சென்னை வந்தார். இன்று வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்கிறார். தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அங்கிருந்து காரில் எம்ஆர்சி நகர், இந்தியன் பேங்க் ஹெஸ்ட் ஹவுசிற்கு சென்றார். இரவு அங்கு தங்கினார். நிர்மலா சீதாராமன் இன்று காலை 10.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்கிறார். அதன் பின்பு தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக ஆய்வை மேற்கொள்கிறார்.

The post தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் இன்று ஆய்வு செய்கிறார் appeared first on Dinakaran.

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,CHENNAI ,Thoothukudi ,
× RELATED மிரட்டி பணம் பறித்த வழக்கு நிர்மலா...