×

2 பழங்குடி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் காளாஹந்தி மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 16ம் தேதி இரவு பக்கத்து கிராமத்தில் நடந்த நாடகத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த கும்பல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சமூகத்தை சேர்ந்த தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து போலீசில் நேற்று முன்தினம் பிஜிப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post 2 பழங்குடி சிறுமிகள் பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Kalahandi district ,Odisha ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர்...