×

போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: வரும் 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பொங்கலுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.

The post போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Chennai ,
× RELATED ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு...