×

போக்குவரத்து தொழிலாளரை அரசு ஊழியராக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பணிபுரிகிறார்கள். பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், காலாவதியானதாக இருந்தாலும், அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அயராது பாடுபடுகிறார்கள். இவர்களுக்கு ஊதிய உயர்வு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, நான்கு மாதம் ஆன பிறகும் பேச்சு வார்த்தை இன்னும் துவங்கப்படவில்லை. பொது சேவையில் ஈடுபடக்கூடிய இந்தத் துறை தொழிலாளர்களை, அரசு பணியாளர்களாக நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போக்குவரத்து தொழிலாளரை அரசு ஊழியராக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Tamil Nadu government ,CHENNAI ,Transport Corporation ,DMD ,General Secretary ,
× RELATED சமூக பொறுப்பின்றி கால்வாய்களில் வீசி...