×

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநர் பிரதாப், சிறப்பு திட்ட செயலாக்கத் திட்ட துணை செயலாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் கலால் வரித்துறை ஆணையராகவும், அந்த பதவியில் இருந்த ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்பு செயலாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வணிக வரி இணை செயலாளராக உள்ள காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்ட சிறப்பு நிர்வாக அதிகாரியாகவும், மனித உரிமை ஆணைய செயலாளரான விஜய கார்த்திகேயன், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும், விவசாயத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த சிரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Secretary ,Siv Das Meena ,Dinakaran ,
× RELATED நீர்வளம், பொதுப்பணி, சுகாதாரத்துறை...