திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழப்பு: 5 பேர் காயம்

திருப்பூர்; திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். சத்யா காலனியில் கார்த்தி என்பவர் கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கார்த்தி வீட்டில் திடீரென அதிக சப்தத்துடன் வெடிசத்தம் கேட்டுள்ளது; வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் கார்த்தியின் வீடு சேதம், எதிரில் இருந்த 5-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன.

வெடி விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் திருமுருகன்பூண்டி போலீஸ் ஆய்வு செய்து வருகிறது. கார்த்தி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான நாட்டு வெடிகளை கைப்பற்றி திருமுருகன்பூண்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்தானது எப்படி நடந்தது? இங்கு எப்படி நாட்டு வெடி தயாரிக்கப்பட்டது? இதற்கு முக்கிய காரணம் யார் என்பது குறித்தும் இறந்தவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி ஒருவர் உயிரிழப்பு: 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: