×

அதிகாரியின் ‘ஷூ’க்களை திருடி எரித்த திருடன்: சட்டீஸ்கர் போலீஸ் தவிப்பு


ராய்பூர்: சட்டீஸ்கரில் அதிகாரியின் ஷூக்களை திருடிய திருடன், அதனை எதிர்த்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூர் அடுத்த தரம்பூரா பகுதியில் வசிக்கும், மாநில மின்சார விநியோக நிறுவன அதிகாரி ஒருவர் தனது விலை உயர்ந்த ஒரு ஜோடி பிராண்டட் ஷூவை, வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார். அதனை பார்த்த ஒருவன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒரு ஜோடி ஷூவைவும் திருடிச் சென்றுவிட்டான். இவ்விவகாரம் குறித்து அந்த அதிகாரி போலீசில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குபதிந்து, விலையுயர்ந்த ஷூக்களை திருடியவனை தேடி வந்தனர். இதுகுறித்து ேபாலீசார் கூறுகையில், ‘வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஷூக்களை திருடியது அதே பகுதியை சேர்ந்த ரோகித் சிங் (21) என்பது தெரியவந்தது.

அதையடுத்து அவனை கைது செய்துள்ளோம். திருடிய ஷூக்களை போட்டுக் கொண்டு ஜாலியாக சுற்றி வந்துள்ளான். பின்னர் போலீசில் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தில், அந்த இரண்டு ஷூக்களையும் தீ மூட்டி எரித்தான். தற்ேபாது போலீசின் பிடியில் அவன் சிக்கியதால், தீ மூட்டி எரித்த ஷூவின் ஒருபகுதியுடன் அவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். விலை உயர்ந்த ஷூவை காணவில்லை என்று புகார் கொடுத்த அதிகாரிக்கு, அவரது ஷூக்கள் கிடைக்கவில்லை. திருடியவனும் ஷூக்களை எரித்துவிட்டதால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

The post அதிகாரியின் ‘ஷூ’க்களை திருடி எரித்த திருடன்: சட்டீஸ்கர் போலீஸ் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Raipur ,
× RELATED நக்சல் கண்ணிவெடியில் சிக்கி போலீசார் 2 பேர் பலி