×

தொற்று எண்ணிக்கை 68 ஆக உயர்வு அண்ணாநகர் மண்டல பகுதிகளில் கொரோனா பரிசோதனை தீவிரம்: சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்தில், தொற்று எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதால், கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோடி மக்களை பாதித்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாலும், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாகவும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை துவங்கியது.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வழக்கம்போல் சென்று வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 6,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், சென்னை மாநகரா ட்சி சார்பில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் 2 நாட்களுக்கு முன்பு 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தொற்று எண்ணிக்கை 68ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அண்ணாநகர், அமைந்தகரை, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும்போது, ‘‘அண்ணாநகர் மண்டலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்க, சுகாதார ஆய்வாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர். கொரோனா பாதிப்பில் உள்ளவர்களை கண்காணித்து அவர்களுக்கு வேண்டியதை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். கொரோனா பரவலை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. தியேட்டர், மார்க்கெட், மால் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கவனமாக இருக்கவேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்,’’ என்றனர்.

The post தொற்று எண்ணிக்கை 68 ஆக உயர்வு அண்ணாநகர் மண்டல பகுதிகளில் கொரோனா பரிசோதனை தீவிரம்: சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Anna Nagar ,Chennai Corporation ,China ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக...