×

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

 

தஞ்சாவூர், மே 1: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது.கடந்த சில தினங்களாக தஞ்சாவூர் மாநகர் மட்டும் இன்றி மாவட்டங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை சாலியமங்கலம் மாரியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு சிறிது நேரத்திற்கெல்லாம் கருமேகம் சூழ்ந்து இடி இடிக்க தொடங்கியது. பிறகு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது இடியுடன் கூடிய மழை பெய்தது. காலை முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் பிற்பகலில் மழை பெய்தது மக்களிடையே குளிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையில் தஞ்சாவூர் மாநகரில் 3, வல்லத்தில் 14, குருங்குலத்தில் 23, ஒரத்தநாட்டில் 29.60, நெய்வாசல் தென்பகுதியில் 11, வெட்டிக்காட்டில் 25.40, பாபநாசத்தில் 4, அய்யம்பேட்டையில் 18, பட்டுக்கோட்டையில் 13, அதிராம்பட்டினத்தில் 15.30 , ஈச்சம் விடுதியில் 2, பேராவூரணியில் 4 என மொத்தமாக 162.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் சராசரியாக 7.73 செமீ மழை பதிவாகியுள்ளது என தஞ்சை பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா...