×

தெலங்கானாவில் வாக்கு சேகரிப்பு பிஆர்எஸ் கட்சியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: பட்டாசு வெடித்ததால் விபரீதம்

திருமலை: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்), காங்கிரஸ், பாஜ கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக யாதாத்திரி புவனகிரி மாவட்டம் ஆலேருவில் பிஆர்எஸ் எம்எல்ஏ வேட்பாளரும், எம்எல்ஏவுமான கொங்கிடி சுனிதா நேற்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, கட்சி தொண்டர்கள் பட்டாசு வைத்தபோது மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்தில் பட்டாசு விழுந்தது.

இதனால், தேனீக்கள் பறந்து சென்று அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது.பிரசாரத்தில் இருந்த எம்எல்ஏ உஷாராகி கீழே இறங்கி காரில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்த மற்ற கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியையும், பெண்கள் புடைவை கொண்டு முகத்தை மூடி கொண்டு ஓட்டம் பிடித்து தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பினர்.சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் பிரசாரம் தொடர்ந்தது. தேனீக்கள் தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post தெலங்கானாவில் வாக்கு சேகரிப்பு பிஆர்எஸ் கட்சியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: பட்டாசு வெடித்ததால் விபரீதம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,PRS ,Thirumalai ,Dinakaran ,
× RELATED மேலும் ஒரு பிஆர்எஸ் எம்எல்ஏ...