×

ரூ.122 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு வழக்கு: திருச்சி ஆடிட்டருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட் கிளை

மதுரை: ரூ.122 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக கைதாகி 7 மாதமாக சிறையில் உள்ள திருச்சி ஆடிட்டர் ஈசித்தோருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. ரூ.50லட்சத்தை வைப்பு தொகையாக கட்ட வைத்து மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7 மாதமாக சிறையில் உள்ளதாக கூறி திருச்சி ஆடிட்டர் ஈசித்தோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணிக்கு திருச்சி ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டது.

 

The post ரூ.122 கோடி ஜிஎஸ்டி வரிஏய்ப்பு வழக்கு: திருச்சி ஆடிட்டருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Madurai ,High Court ,ECTOR ,iCourt ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் அரசு...