×

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை!

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்தை நிரப்புவதால், அதன் ஆயக்கட்டுப் பகுதியில் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்கும் மற்றும் பாலாற்றில் தண்ணீர் கொண்டு செல்வதால், பாலாற்றின் இருபுறமும் உள்ள ஜல்லிபட்டி, துறையூர், கம்பாலபட்டி மற்றும் கரியாஞ்செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயருவதால் அவற்றின் குடிநீர் தேவைகள் மறைமுகமாக பூர்த்தி செய்வதற்கும், ஆழியாறு அணையிலிருந்து 03.07.2024 முதல் 09.07.2024 முடிய 6 நாட்களுக்கு வினாடிக்கு 61.00 கன அடி வீதம் மொத்தம் 32.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

 

The post ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Azhiyar Dam ,Coimbatore ,Coimbatore District ,Anaimalai Circle ,Elavakarai Pond ,Jallipatti ,Daryayur ,Kampalapatti ,Karianchettipalayam ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...