சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 2ல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆக.2ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் முன்கூட்டியே தொடங்குகிறது. சிபிஎஸ்இ, மாநில கல்வி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் ஜூலை 7 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறும். பாலிடெக்னிக், பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம்.
The post தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்கும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.