×

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது, மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, கஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Meteorological Centre ,Weather Centre ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு!