×

கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்

  • தாம்பரம் – நெல்லை

ஏப்ரல் 27, மே 4, 11, 18, 25 ஆகிய 5 நாட்கள் தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக நெல்லையை அடையும்.

  • நெல்லை – சென்னை எழும்பூர்

ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்கள் நெல்லையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு எழும்பூரை அடையும்.

  • நாகர்கோவில் – தாம்பரம்

ஏப்ரல் 23, 30, மே 7, 14, 21, 28, ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2 ஆகிய 11 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயிலானது நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் அடையும்.

  • தாம்பரம் – நாகர்கோவில்

ஏப்ரல் 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3 ஆகிய 11 நாட்களில் தாம்பரத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயிலானது இரவு 8.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.

  • திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர்

மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய 9 நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் ரயிலானது கொல்லம், கோட்டயம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், அரக்கோணம் வழியாக மறுநாள் மதியம் 12.45 மணிக்கு சென்றடையும்.

  • சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம்

மே 4,11,18, 25, ஜூன் 1,8,15, 22, 29 ஆகிய 9 நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

  • தாம்பரம் – திருநெல்வேலி

ஏப்ரல் 26, மே 3, 10, 17, 24 ஆகிய 5 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

  • திருநெல்வேலி – தாம்பரம்

ஏப்ரல் 28, மே 5, 12, 19, 26 ஆகிய 5 நாட்களில் நெல்லையில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

  • தாம்பரம் – நாகர்கோவில்

ஏப்ரல் 21, 28, மே 5, 12, 19, 26 ஆகிய 6 நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியே மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

  • நாகர்கோவில் – தாம்பரம்

ஏப்ரல் 22, 29 மே 6, 13, 20, 27 ஆகிய 6 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என ரயில்வே துறை தகவல் அளித்துள்ளது.

The post கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Railway ,Tambaram ,Southern Railway ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...