×

கல்லூரி கட்டிட பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதில் மாணவர்கள் 2 பேர் பலி

திருச்சுழி: திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிஷ்குமார்(15), விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரவி செல்வம்(17). இவர் நரிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால் திருச்சுழி அருகே உள்ள மேலேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் கட்டிட வேலைக்கு இருவரும் சென்றுள்ளனர்.

நேற்று மதியம் முதல் தளத்தில் இருந்து, 2வது தளத்திற்கு கட்டுமானப் பொருட்களை இடம் மாற்றியுள்ளனர். அப்போது தற்காலிக மின் இணைப்பு பெட்டி மீது, இரும்பு பலகை விழுந்துள்ளது. அதை ஹரிஷ்குமார், ரவிசெல்வம் சேர்ந்து தூக்க முயன்றுள்ளனர். இதில் மின்சாரம் தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என தெரிவித்தனர்.

The post கல்லூரி கட்டிட பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதில் மாணவர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi ,Thiruchuzhi, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...