×

செய்யாற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி மாணவன் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த ஒழுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். உணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, இந்திரா என்ற மனைவியும், ரித்தீஷ் (13) என்ற மகனும், சுபர்ணா (11) என்ற மகளும் உள்ளனர். ரித்தீஷ் திருப்புலிவனம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். ஆறுமுகத்தின் வீட்டின் அருகே செய்யாற்றிலிருந்து உத்திரமேரூர் ஏரிக்கும் செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த நித்தீஷ், தனது நண்பர்களுடன் அருகே உள்ள நீர்வரத்து கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தான்.

அப்போது கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் ரித்தீஷ் அடித்துச் செல்லப்பட்டான். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடியும் ரித்தீஷ் கிடைக்கவில்லை. மேலும் இரவு ஆனதால் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர். இதனையடுத்து கிராம மக்கள், நீர்வரத்து கால்வாய் நீரினை அடைத்து கால்வாய் வரண்டதும், இரவு 1 மணியளவில் சேற்றில் சிக்சியிருந்த ரித்தீஷை சடலமாக மீட்டனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செய்யாற்றில் குளித்தபோது சேற்றில் சிக்கி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Uthramerur ,Arumugam ,Indira ,
× RELATED கல்லூரி மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி